Monday, 21 August 2023
Vegetable gardening...
Sri Prabhu...
Wednesday, 5 May 2021
மீண்டும் பதிவுகள்...
பல மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் வலைப்பூவில் பதிவுகளிட தொடங்குகிறேன். முன்பில்லாததைவிட தற்போது அதிக நேரமிருப்பது ஒரு முக்கிய காரணம்.
நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவின் காரணமாக, மீண்டும் எங்கள் பகுதியில் "உள்ளே இரு" எனும் போலீஸ் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேறு வழியில்லை, நமது பாதுகாப்பு கருதி கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள வீட்டிலேயே இருந்திடவேண்டியதுதான்.
இந்த அரிய சந்தர்ப்பத்தில் மனதில் படுவதை பதிவிலிட ஒரு ஆர்வம் பிறந்திருக்கிறது... பார்ப்போம் பிறகு...
Friday, 4 December 2020
சாபம் பலிக்குமா?
நல்லவங்கள வம்புக்கு இழுக்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க. ஏன்னா, அவர்களின் கோபம் நமது முன்னேற்றத்தை தடுக்கும்னு ஒரு நம்பிக்கை.
சரி, நல்லவங்கன்னு எப்படி கண்டுகொள்வது?
தானுண்டு தங்கள் வேலையுண்டுன்னு யார் வம்புக்கு போகாம, ஒதுங்கி அமைதியா வாழ்பவர்களை இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
இவர்கள் மனமகிழ்ந்து வாழ்த்தினாலும் பலிக்கும், அவங்க மனம் நொந்து சாபமிட்டாலும் அது பலிக்கும்.
இதுல லாஜிக் உண்டா?
இதுக்கு குண்டக்க மண்டக்க மாதிரி ஒரு கேள்வி....
ஆசிர்வாதம் பெறும்போது தலைவணங்கி புன்னகையோடு ஏற்றுக்கொள்கிறோமே, அப்போ அதுக்கு ஈக்குவளாகவும், ஆப்போஸிட்டாகவும் நிர்பந்தமான செயல்வடிவம் தரும் சாபத்துக்கு உள்ள சக்தியையும் நம்பித்தானே ஆகணும்???
Thursday, 18 April 2019
கேமரன் மலையில் ஒருநாள்...
மதிய நேர சூரிய ஒளி சற்று கதகதப்பை தருவது ஆறுதலளிக்கிறது.
கையில் கிடைத்தவை, ஏப்ரல் 2019
நமது தேசிய மலைத்தொடரோடு ஒட்டிய இருபக்க வழிப்பாதைகளில் பலரும் மேற்கு பகுதியில்தான் பயணம் செய்திருப்போம். கிளந்தான், திரெங்கானு போன்ற மாநிலங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் நம் சமூகத்தினர் அனுபவம் குறைவுதான்.
அதிவிரைவு ரயில் திட்டமொன்று தற்போது பெருமளவு பேசப்பட்டு வருகிறது. போர்ட் கிள்ளானில் இருந்து கோத்தாபாரு வரை திட்டமிடப்பட்டிருக்கும் அது நடைமுறைக்கு வரும்போது சுற்றுப்பிரயாணங்கள் மட்டுமல்ல வணிக வளர்ச்சிகளும் கண்முன்னே தெரியும்.























